திருச்சிராப்பள்ளி, மார்ச் 20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தற்போதைய கல்வியில் குழந்தைகள், ஆசிரியர்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி யில் ஞாயிறு அன்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில துணைத்தலைவர் நந்த லாலா தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் விழியின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், எழுத்தா ளர் விழியன் எழுதிய டீன் வயதினர்களுக்கான குறுங் கட்டுரைகள் நூலை கவிஞர் நந்தலாலா வெளியிட, அதனை இளம் படைப்பாளி சாய் மகஶ்ரீகவின் குமார் பெற்றுக் கொண்டார். சங்க மாவட்டத் தலை வர் சிவ.வெங்கடேஷ், மாவட் டச் செயலாளர் ரெங்க ராஜன், மாநகரத் தலைவர் நாகநாதன், மாநகரச் செய லாளர் இளங்குமரன், நல்லா சிரியர் ஆஷா தேவி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். சங்க பொருளாளர் ஹரி பாஸ்கர் நன்றி கூறினார்.