அறந்தாங்கி, ஜூலை 8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 8 ஆம் வகுப்பிலான குழந்தைகளுக்கு கதை கூறுதல் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 30 குழந்தைகள் ஆன்- லைன் மூலமாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக் கான பரிசளிப்பு விழா அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச தலைவர் சேக்சுல்தான் தலைமை வகித்து உரை யாற்றினார். செயலாளர் நல்லாசிரியர் ஸ்ரீ.பாஸ்கரன் வரவேற்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் ராசி பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித் தனர். தமுஎகச மாநிலக் குழு உறுப் பினர் கவிஞர் ஜீவி சிறப்புரையாற்றி னார். சிறப்பு விருந்தினர்கள் குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். தமுஎகச அறந்தாங்கி கிளையின் துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கவிஞர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.