districts

img

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, நவ.24 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியை சென்ற டைந்தது.  குழந்தைகளுக்கான சட்டங்கள், குழந்தை திருமணங்கள், பாலியல் வன் கொடுமைகள், போதைப்பொருள் ஒழித்தல் குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.