திருச்சிராப்பள்ளி, பிப்.2 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில் நடைபெறும் சாரணர், சாரணியரின் வைர விழா நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள ஞாயிறன்று திருச்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தி லிருந்து கார் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலை யத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரை யர் மணி மண்டபம், நீதிக்கட்சியின் வைரத் தூண், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், ஏழிசை மன்னர் நடிகர் தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டார். பிறகு மூன்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பழனியாண்டி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.