districts

img

சிதம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு

சிதம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை சார் ஆட்சியர் ராஷ்மிராணி துவக்கி வைத்தார். இதில் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, திமுக மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், ஏ ஆர் சி மணிகண்டன், சி கே ராஜன், ஜெயச்சித்ரா பாலசுப்ரமணியம், அசோகன், கல்பனா சண்முகசுந்தரம், காங்கிரஸ் தில்லை மக்கீன், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அண்ணாமலை நகர், சி.கொத்தங்குடி, லால்புரம், தண்டேஸ்வரநல்லூர் உள்ளிட்ட  சிதம்பரம் நகரத்தை சுற்றியுள்ள  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர்.