தஞ்சாவூர், ஏப்.24-
தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 17 ஆம் தேதி தேதி கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 1 அன்று காலை 6 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேரை அலங்கரிப்பதற்காக, திங்கள்கிழமை காலை, சிவச்சாரியார்கள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பந்தக்கால் நட்டனர். பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவங்கினர்.