districts

img

மானாமதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திரளானோர் பங்கேற்பு

மானாமதுரை, மே 3-

   மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் சித்  திரை திருவிழாவின் தேரோட்டம் மே 3 புதனன்று நடைபெற்றது.  சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவி லில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25 அன்று துவங்கி , 10 நாட்க ளாக நடைபெற்று வருகிறது.

  விழா நாட்களின் போது சுவாமி கள் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தரு ளிய பின்னர் வீதிவுலா நடைபெற்றது.கோவில் முன்பாக  வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 2 அன்று நடைபெற்றது. மே 3 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்போடு தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே.5 அன்று காலை 7 மணிக்கு நடை பெற உள்ளது.