districts

img

ஒன்றிய அரசு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் மாற்றுத்திறனாளிகள் நூதனப் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.1-  மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய  அரசு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்  யும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறை செய்து இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதையும், மாற்றுத்  திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலு கைகளை வழங்காமலும், ஐ.நா உடன்  படிக்கைகளை மதிக்காமனும், மாற்றுத்  திறனாளிகளுக்கான நிதியை குறைத்துக்  கொண்டே வருவதையும், இடஒதுக்கீட்டை  முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன் அறிமுக உரையாற்றி னார். மாவட்ட தலைவர் டி.கணேசன் மக்கள்  மன்ற நடுவராகவும், குத்தாலம் ஆர்.கமல நாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்  தீரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, சீர்காழி நகர பொறுப்பா ளர் ஆர்.சுரேஷ், மாவட்ட துணைச்செய லாளர் எம் .சொக்கலிங்கம் ஆகியோர் ஒன்றிய அரசு மீது வழக்கு தொடுத்து உரை யாற்றினர்.  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. அறிவழகன் வழக்கினை மறுத்து பேசி னார். மாவட்டப் பொருளாளர் ஜி.லெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100-க்கும்  மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உற்சாக மாக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை 
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்  கைகளை பட்டிமன்ற வடிவில் முன்வைத்து நூதனப் போராட்டம் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வியாழனன்று நடைபெற்றது. நடுவராக சிஐடியு மாவட்ட துணைத்  தலைவர் சி.அன்புமணவாளன் செயல் பட்டார். வழக்கை தொடுக்கும் அணியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். கணேஷ், ஆர்.நிரஞ்சனா, எஸ்.மகா லெட்சுமி ஆகியோரும், மறுக்கும் அணி யில் ஜி.கிரிஜா, எம்.சி.லோகநாதன், எஸ்.பாட்சபாய் ஆகியோரும் பேசினர்.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தங்கவேல், துணைத் தலைவர் கே. சண்முகம், பொருளாளர் ஜி.சரவணன் உள்  ளிட்டோர் பேசினர். ஏராளமான மாற்றுத் திற னாளிகள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்தில், மாற்றுத் திறனாளி சங்க  மாவட்டச் செயலாளர் என்.பன்னீர்செல் வம், அறிமுக உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ் வழக்கை தொடுத்  தார். சமூக செயற்பாட்டாளர் தே.வி.சர வணன் வழக்கை மறுத்தார். இதற்கு மக்கள் மன்ற நடுவராக விதொச மாவட்டச் செயலா ளர் எம்.முருகையன் உரையாற்றினார். நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பி னர் பி.எம்.லெனின், மாவட்டத் தலைவர்  ஏ.சிக்கந்தர், பொருளாளர் சி.பாலமுரு கன், துணைத் தலைவர் ஜெ.சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.