தஞ்சாவூர், ஆக.18 -
நகைப்பட்டறை உரிமையாள ரிடம் கையூட்டு பெற்றதாக எழுந்த புகாரில், தஞ்சாவூர் கிழக்கு காவல் துறை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர், கீழஅலங்கம் பகுதி யில் இருந்த டாஸ்மாக் கடையில் உள்ள பாரில், கடந்த மே 21 அன்று குப்புசாமி(68), விவேக் (36) ஆகிய இருவரும் மது அருந்திய நிலை யில் இறந்தனர். மதுவில் சயனைடு கலந்து குடித்து இறந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இறந்தவர்களுக்கு சயனைடு எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், நகை தயாரிக்கும் பட்டறைகளில் சயனைடு பயன்படுத்துவதால், நகை தயாரிப்பு பட்டறை உரிமை யாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை என்ற பெயரில், காவல்துறையினர் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக கூறி நகைப் பட்டறை உரிமையாளர்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் விசாரணை அதிகாரியான தஞ்சாவூர் கிழக்கு காவல் ஆய்வாளர் கருணாகரன், நகை தயாரிப்பு பட்டறை உரிமை யாளர் ஒருவரிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, சிஐ டியு நிர்வாகிகள் பெயரில், காவல் துறை ஆய்வாளர் மீது குற்றம் சுமத்தி வாட்ஸ் அப் பதிவு ஒன்று வெளியானது.
இதுகுறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் நடத்திய விசா ரணையில், சிஐடியு வெளியிட்ட தகவல் உறுதியானது. எனவே, ஆய்வாளர் கருணாகரனை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தர விட்டார்.