திருத்துறைப்பூண்டி, ஏப்.23-
ஏப்ரல் 23 உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் ஏற்று, சிபிஎம், தமுஎகச, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல் வேறு பகுதியில் புத்தகம் விநியோகம் செய்து, புத்தக தினத்தை கொண்டா டினர்.
அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு கமிட்டி சார்பில் மடப்புரம் கடை வீதி யில் புத்தக தின விழா நடைபெற் றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் டி.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மார்க்சியம் குறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் சிறப்புரையாற்றி னார். இதில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் எஸ்.முத்துச்செல்வன், எஸ். பவானி, வி.செந்தில்குமார், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு மார்க்சியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.