தஞ்சாவூர், ஜூலை 1-
இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண் டாடப்படுகிறது. வரலாற்று புகழ்மிக்க மருத்து வரும் மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திரராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள மருத்து வர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெருந் தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை யில், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகி யோர் சார்பில் மருத்துவ தின விழா கொண்டா டப்பட்டது. தலைமை மருத்துவர் காமேஸ் வரி தேவி, மருத்துவர்கள் சிந்தியா, ரம்யா, பாலகுமார், இலக்கியா, சுரேஷ்குமார் ஆகி யோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கார்த்தி வித்யாலயா பள்ளி
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில் மழலையர் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் மருத்து வர் போல் வேடமணிந்து மருத்துவர் பற்றியும், மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பேசி னர். கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். பள்ளி முதல்வர் அம்பிகாபதி வர வேற்றார். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாபநாசம்
பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவர் தின விழா நடைபெற்றது. மருத்துவர் அழகு சிலம்பரசிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட் டது. இதில் தலைவர் ராஜாமுகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.