தஞ்சாவூர், ஏப்.15- தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி யில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி - சேதுபாவா சத்திரம் ஒன்றியங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பேராவூரணி அண்ணா சிலை அருகில் திங்கள்கிழமை பிரச்சாரப் பயணத்தை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ராஜமாணிக் கம், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பி னர்கள் துரை.பன்னீர்செல்வம், வீரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.சித்திரவேலு, விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.ரவி மற்றும் குழுவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.