தஞ்சாவூர், ஆக.12-
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு, காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும். கருகும் குறுவை பயிர்களை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.கருப்பையா (பேராவூரணி), ஏ.எஸ்தர் ஜெய லீமா (சேதுபாவாசத்திரம்) ஆகியோர் தலைமை வகித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு நாகை நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.