districts

பட்டியல் சமூக குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள்

திருச்சிராப்பள்ளி, ஆக.14 -

       பட்டியல் சமூக குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை உட னடியாக கைது செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் புற நகர் குழு வலியுறுத்தி உள்ளது.

     இதுகுறித்து கட்சியின் புறநகர்  மாவட்டச் செயலாளர் எம்.ஜெய சீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

   திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அபினிமங்களம் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண்ணுசாமி (65). இவர் பட்டியல் சமூகத்தைச் (தலித்) சேர்ந்தவர். தனது மனைவி  மற்றும் மகன்களுடன் வசித்து வரும் இவர், ஆடு வளர்க்கும் தொழில் செய்கிறார்.  

    இந்நிலையில் கடந்த ஆக.12 அன்று இரவு 9 மணியளவில் கண்ணுசாமி வீட்டின் முன்பு சாத்த னூரை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும்  அவரது நண்பர் ஒருவர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மேலும்  அங்கேயே சிறுநீரும் கழித்துள்ள னர். இதுகுறித்து அவர்களிடம் கண்ணுசாமியின் மகன்கள் அசோக் குமார் (33), ஆனந்தராஜ்(31) ஆகி யோர் தட்டி கேட்டுள்ளனர்.  

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

      இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் அவர்களை தாக்கி னார். பின்னர் இச்சம்பவம் குறித்து தொலைபேசி மூலம் அவரது நண் பர்கள் பாஸ்கர் மற்றும் லோக நாதன் ஆகியோருக்கு தகவல் தெரி வித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமையில் கும்பலாக  வந்த சாதி வெறியர்கள்,  கண்ணு சாமி, மாற்றுத்திறனாளியான அவரது மனைவி சுசிலா(60), மகன்கள் அசோக்குமார், ஆனந்த ராஜ் ஆகியோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஆனந்தராஜின் மனைவி முனீஸ் வரியை (27) கீழே தள்ளி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

    மீண்டும் தாக்குதல்

     அப்போது அந்த வழியாக  வந்த பேருந்தை வழிமறித்து,  அதிலிருந்த சாதிவெறியர்களின் கும்பலைச் சேர்ந்த இளைஞர்களை யும் அழைத்து வந்து, கண்ணு சாமி குடும்பத்தினர் மீது மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்  அசோக்குமார் மற்றும் ஆனந்த்ராஜ்  ஆகியோருக்கு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு  ஆபத்தான நிலையில் கிடந்தனர். அவர்களை அருகில் இருந்த வர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

ஆக.16 இல் ஆர்ப்பாட்டம்

     இச்சம்பவம் குறித்து இதுவரை  காவல்துறை வழக்குப் பதிவு செய் யவில்லை. இதனை கண்டித்தும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆகஸ்ட் 16 அன்று (புதன் கிழமை) மாலை 4 மணிக்கு புலி வலம் கடைவீதியில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது.

    இந்த விவகாரத்தில் திருச்சி  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.