வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தஞ்சாவூர், ஏப்.13- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி யில் “வாழ்க்கைத்திறனை மேம்படுத்தும் வழிகாட்டுதல் பயிற்சி” நடைபெற்றது. விழாவிற்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனை வர் ப.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். சீனா தேசத்தின் சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒருங்கிணைப்பா ளர், துறைத்தலைவர் முனைவர் நாகராஜன் மற்றும் புலத்தலைவர் முனைவர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீரநாராயண பெருமாள் கோவில் நிலம் மீட்பு
அரியலூர், ஏப்.13- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட் டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீர நாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்த மான 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலம் மணிவண் ணன் என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி, உடையார்பாளை யம் வருவாய் கோட்டாட்சி யர் பரிமளத்திடம் புகார் செய்தார். புகாரின் பேரில், ஆலய நிலங்கள் தாசில்தார் கலை வாணன் கோயிலுக்குச் சொந் தமான நிலத்தில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது விசா ரணையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ள மணிவ ணன் யார் என்பது தெரியாது எனவும் அப்படி ஒருவர் இப் பகுதியில் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் கோவிலுக்கு சொந்தமான நிலம் பல்வேறு தரப்பினர் மூலம் விவசாயம் செய்யப்படுவது தெரிய வந் தது. இதனையடுத்து நில த்தை வீரநாராயண பெரு மாள் பெயரில் பட்டா மாற் றம் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலத் தின் சந்தை மதிப்பு ரூ.4.50 கோடி இருக்கும் என கூறப் படுகிறது.
மணமேல்குடியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
அறந்தாங்கி, ஏப்.13- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்கும் செயல்பாட்டில் குழு அமைத்து பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. மேலும் பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் துணை தேர்வு எழுது வதற்கான ஆலோசனைகளை வழங்குவது குறித்து விவா திக்கப்பட்டது. துணை தேர்வு குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற 14417 என்ற இலவச உதவி மைய எண்ணை அழைக்கலாம் என விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி
பெரம்பலூர், ஏப்.13- திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங் களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மாநகரம், திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவு களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப் பாக்கிச் சுடும் போட்டி செவ்வாயன்று பெரம்பலூர் மாவட் டம் நாரணமங்கலத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க.கார்த்திகேயன் தலைமை வகித்தார். போட்டியில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் துணைக்காவல் கண்காணிப்பா ளர்கள் முதல் காவல்துறை தலைவர் வரை 18 பேர் கலந்து கொண்டனர்.
மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
மன்னார்குடி, ஏப்.13- திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின் விபத்தினை தடுக்க மின் வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி நகர உதவி செயற்பொறியாளர் முனைவர் சா.சம்பத் தலைமை யில் நடைபெற்றது. பயிற்சியில், பணியின் போது மின் விபத்து ஏற்படா மல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் பணியாற்ற வேண் டும். கையுறை, இடுப்புக் கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின் பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும். இயற்கை இடற்பாட்டால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்க ளுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து செயல்பட வேண்டும். பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டது.மேலும் மின் விபத்தில் சிக்கி யவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் அனைத்து பணியா ளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது
புதுக்கோட்டை, ஏப்.13- சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மாநில அளவிலான மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளது: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளா கமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளா கங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணியை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது களை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய (tnpcb. gov.in) இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பப் படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதி கள் இரண்டினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023.