districts

img

தமிழ்நாட்டில் 7 இடங்களில் புற்றுநோயை கண்டறியும் வசதி

தஞ்சாவூர், ஜூன் 20 -

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 7 இடங்க ளில் புற்றுநோயை கண்டறியும் வசதி ஏற்படும்  என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.42  கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மைய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான புற்றுநோயை கண்டறியும் நவீன ஸ்கேன் வசதி தொடக்க விழா, பூத லூர் அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம்  மதிப்பீட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா  தஞ்சையில் நடைபெற்றது.  

    விழாவிற்கு ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். அமைச்சர்கள் மா.சுப்பி ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.,  எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே. ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் வரவேற்றார்.  

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகத்தில் புற்று நோயை  துல்லியமாக கண்டறியும் அதிநவீன கருவி யான பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் 2 அரசு மருத்துவமனைகளில்தான் இருந்தது. இதனை மேலும் 5 அரசு மருத்து வமனைகளில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. 2-ஆவதாக தஞ்சையில் தொடங்கப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த கருவி மூலம் ஒரு பரிசோதனைக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத் தில் இலவசமாகவும், ரூ.11 ஆயிரம் கட்டணம்  செலுத்தியும் பரிசோதனை செய்து கொள்ள லாம்.

    தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் அருகில் உள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயனடைவர். அடுத்த கட்டமாக சேலம், கோவை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இன்னும் 10 நாட்க ளுக்குள் தொடங்கப்படும். இதன் மூலம் 7 இடங்களில் புற்றுநோயை கண்டறியும் வசதி ஏற்படும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று இல்லை.  

   தஞ்சை மாநகராட்சியில் 12 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 6 மையங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சரால் திறந்து  வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 மையங்க ளின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது வும் விரைவில் திறக்கப்படும்” என்றார்.