districts

img

வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா ரத்து

பாபநாசம், ஜூன் 8-

       தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் குப்பை மேடு ஈ.பி தெரு வில் வருவாய்த் துறைக்கு சொந்த மான இடத்தில் முறைகேடாக வழங்  கப்பட்ட குடிமனை பட்டாக்களை ரத்துச் செய்யக் கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் அரு கில் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது.  

     நகரச் செயலாளர் சங்கர்  தலைமை வகித்தார். விவசாயத்  தொழிலாளர்கள் சங்க இளங்கோ வன், மாதர் சங்க நிர்வாகிகள் சாந்தா, சுதா ஆகியோர் முன்  னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் சிவ குரு, மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலா ளர் முரளிதரன் ஆகியோர் பேசி னர். இதில் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  

    காத்திருப்புப் போராட்டத்தின் போது தனி நபரின் பெயரிலிருந்த பட்டா ரத்துச் செய்யப்பட்டு அர சாணை வழங்கப்பட்டது. இது  20 வருட கால தொடர் போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியாக போராட்டக் குழு நிர்வாகிகள் தெரி வித்தனர்.