districts

img

சலுகைகளை பறிக்கும் ஆணையை ரத்து செய்க! மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 8 - 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலு கைகளை பறிக்கும் வாரிய ஆணை எண் 2-2022 ஐ ரத்து  செய்ய வேண்டும். 3 ஆண்டு களாக நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும். 1.1.2022 முதல் வழங்க வேண்டிய 3  சதவீத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும்.  மின் வாரியத்தில் காலி யாக உள்ள 52 ஆயிரம் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய அனைத்து தொழிற்  சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு சார்பில் தென்னூ ரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி  சங்க மாவட்ட, மண்டல செய லாளர்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வ ராஜ் நன்றி கூறினார்.