districts

நாகை, தஞ்சை தொகுதிகளில் பிரச்சாரம்: சிஐடியு முடிவு

திருவாரூர், மார்ச் 31 - சிஐடியு திருவாரூர் மாவட்டக் குழு  கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் எம்.கே.என். அனிபா தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் உரையாற்றி னார். கூட்டத்தில், இந்தியா கூட்டணி சார்பாக நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு கதிர்  அரிவாள் சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முர சொலிக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்குச் சேகரித்து, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய நகரங்களில் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.  இதில் சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் சார்பாக, சிஐடியு வளர்ச்சி நிதி  மற்றும் தேர்தல் நிதி வழங்கப்பட்டன. சிஐடியு  மாவட்ட நிர்வாகிகள் டி.வீரபாண்டியன், இரா. மாலதி, எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.