அரியலூர், ஏப்.18 -
அம்பானி, அதானி கார்ப்பரேட்டுகளின் மோசடிகளுக்குத் துணை போகும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும் பட் ஜெட்டில் உணவு மானியம், உழவு மானி யத்தை ரத்து செய்தது, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வெட்டி திட்டத்தை முடக்குவது, பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கை களை அம்பலப்படுத்தியும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை, பேருந்து நிலையம். பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம், நான்கு ரோடு, காந்தி பூங்கா பேருந்து நிறுத்தம் மற்றும் கடைவீதி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டச் செயற்குழு மணிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பத்மாவதி, எஸ்.என்.துரை ராஜ், ரவீந்திரன், கோவிந்தராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.