தஞ்சாவூர், ஜூலை 12-
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பேராவூரணியில் விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக் கப்பட உள்ளது என குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் இடுபொருட்கள் வழங் கும் துவக்க விழாவில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், இடு பொருட்கள் வழங்கும் துவக்க விழா, தஞ்சா வூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்கு நர் (மத்திய திட்டம்) எஸ்.ஈஸ்வர் தலைமை யில் நடைபெற்றது.
விழாவை துவக்கி வைத்து பேராவூ ரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு விவ சாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை யை வெளியிட்டு வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகை யில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகை யில் விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்” என்றார்.
விழாவில் 23 பேருக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களும், 6 பேருக்கு சான்று பெற்ற உளுந்து விதைகளும், 7 பேருக்கு சான்று பெற்ற கடலை விதைகளும் வழங் கப்பட்டன. முன்னதாக வேளாண் பொருட் கள், விதைகள், இயற்கை உரங்கள், பயிர் ஊக்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன.