பொன்னமராவதி, ஏப்.29-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியை சேர்ந்த வெள்ளாளப்பட்டியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சாலை மறியல் அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து ஒன்றிய நிர்வாகம் குடிநீர் வழங்கியது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியியை சேர்ந்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாத நிலையில் சிபிஎம் சார்பில் ஒன்றியச் செயலாளர் பக்ரு தீன் தலைமையிலும் கிளை நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், ஆறுமுகம் முன்னிலை யில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு மின்மாற்றிகள் பழுதான காரணத்தால் தண்ணீர் வழங்க முடி யாத நிலை உள்ளதாகவும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் ஜென ரேட்டர் வைத்து இயக்கி தண்ணீர் வழங்க நட வடிக்கை எடுத்தார். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.