விருதுநகர், ஆக.6-
வங்கி ஏலத்தில் குறைந்த விலையில் ஏராளமான நகைகள் வாங்கித் தருவதாக வாலிபர் ஒருவரிடம் ரூ.12.50 இலட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் எம்.அம்மன்பட்டி கோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). விருதுநகர்-ஆலங்குளம் சாலையைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி பேச்சியம்மாள். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், தான் கூட்டுறவு வங்கி யில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்ப தாக ரமேஷிடம் பேச்சியம்மாள் கூறியுள் ளார். மேலும், அவ்வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்திற்கு வர உள்ளதாகவும், ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தால் 380 கிராம் நகைகளை ஏலம் எடுத்து தரமுடியும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய ரமேஷ் பணத்துடன் தனது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சிவகாசி பேருந்து நிலையத்திற்கு வந்துள் ளார். பின்னர் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து பேச்சியம்மாளின் வங்கி கணக் கிற்கு ரூ.11 லட்சத்தை பரிமாற்றம் செய்தார். மேலும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமாக கொடுத்தாராம்.
பணத்தைப் பெற்று கொண்ட பேச்சி யம்மாள் நகைகளை வாங்கி வருவதாக வும் அதுவரை பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள் ளார். ஆனால் வெகுநேரமாகியும் வர வில்லை.
இதனால், சந்தேகமடைந்த ரமேஷ் அவ ரது செல்லிடப்பேசி எண்ணிற்கு அழைத் துள்ளார். ஆனால், சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. எனவே, இதுகுறித்து சிவ காசி நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பேச்சியம்மாளைத் தேடி வருகின்றனர்.