districts

புதர் மண்டிக் காணப்படும் விளையாட்டு மைதானம்

தஞ்சாவூர், மே 20-

   தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சர பேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்திட இளைஞர்கள் மற்றும்  சமுதாய நலமன்றம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

   அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் விளை யாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மைதானம் முறையான பராமரிப்பின்றி அதிகளவில் புதர் மண்டிக்  காணப்படுகிறது. இதனால் சிறுவர்கள் விளையாடுவதற்கு அச்சப்படுகின்றனர். அதிகளவில் புதர் மண்டி இருப்பதால் பகலி லேயே விஷப்பூச்சிகள் சுற்றித் திரிகின்றன.

   பாம்புகள் நட மாட்டம் சர்வசாதாரணமாக காணப்படுகிறது.  எனவே, பள்ளி மாணவர்கள்கள், இளைஞர்கள் மற்றும் பெரிய வர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தை உடனடி யாக சீரமைத்து தரவேண்டுமென அரசுக்கு இளைஞர்கள் மற்றும் சமுதாய நலமன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.