districts

முறையான வழித்தடங்களில் பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

 திருச்சிராப்பள்ளி, ஜன.5- திருச்சி மாவட்ட வியாபாரக் கழக நிர்வா கக் குழு கூட்டம் தலைவர் ஜே.ஜே.எல். ஞானராஜ்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துவாக்குடி முதல் திரு வெறும்பூர். பெல் கைலாஷ்நகர். காட்டூர்,  அரியமங்கலம், பால்பண்ணை சூளைக் கரை மாரியம்மன் கோவில், தர்பார் மேடு  வழியாக காந்திசிலை, இ.பி. ரோடு, பேட்டை முருகன் தியேட்டர், அரசமரத்தடி  பட்டர்வர்த் சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்ற நகர பேருந்துகளை இயக்க வேண்டும், டெஸ்ட்  பர்ச்சேஸ் தொடர்பான நடைமுறை விழிப்  புணர்வை அனைத்து சிறு, குறு நடுத்தர வியாபாரிகளுக்கும் ஏற்படுத்திய பின் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்று, வரவு செய்கின்றவர்களிடம் மட் டுமே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.