அறந்தாங்கி, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தினையாகுடி, திருநெல்லிவயல் கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் நடுமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 80-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.