திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம், காட்டுக்குளம் ஊராட்சி, பெரியகாட்டுகுளத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தில் அரசால் கட்டப்பட்டுள்ள 100 நூறு சமத்துவபுர வீடுகளுக்கு, காட்டுக்குளம் ஊராட்சியிலிருந்து தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதியுள்ள பயனாளிகள் இசைவு கடிதத்துடன் ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை முசிறி ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வ.ஊ) ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற குடும்பத் தலைவி கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற துணை ராணுவ உறுப்பினர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், எச்ஐவி, டி.பி போன்ற நோய்கள் சம்பந்தப்பட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சான்று அளிக்கப்பட்ட நபர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர், ஏழை மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.