districts

img

குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர் - கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

அரியலூர், செப். 20 - ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனை எதிரே கொள்ளிடம் கூட்டுக் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர்  வீணாகிறது. இதை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து, கொள்ளி டம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்  ஜெயங்கொண்டம் வழியாக, ஆண்டி மடம் பகுதிக்கு குழாய் அமைக்கப் பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இதே  குடிநீர் ஜெயங்கொண்டம் நகராட்சிப்  பகுதி மக்களுக்கும் வழங்கப்படுகிறது.  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனை எதிரே திருப்பத்தில் செல்லும் சாலையோரத்தில் உள்ள இந்த குடிநீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த  ஒரு வருடத்திற்கு மேலாக குடிநீர் வீணா கிறது. இதனால் பல கிராமங்களில்  குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசுத் துறையின் முக்கிய அதிகாரி கள் இவ்வழியாக சென்று வந்தாலும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நக ராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அதை சரி செய்தாலும் உடைப்பு சரியாக வில்லை. மிகவும் பழுதான அந்தக் குழாயை அப்புறப்படுத்திவிட்டு, புதிய குழாய் மாற்றாமல் இருப்பதே இதற்கு காரணம்  என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  இளங்கோவன் கூறுகையில், கடந்த ஓராண்டாக இதே நிலை நீடிக்கிறது. பழுதடைந்த குழாயை மாற்ற மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரியுள்ளார்.