districts

திருச்சி முக்கிய செய்திகள்

பட்டா மாறுதலுக்கு  லஞ்சம்: விஏஓ கைது 

பொன்னமராவதி, ஜூலை 24 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ள  ஆர்.பாலக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவல ராக பணிபுரிந்து வரு பவர் அப்பாதுரை (56).  அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது உறவினர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்துள்ளார். அதற்காக ரூ.50,000 சிவ குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக் கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்த சிவக்குமார், லஞ்ச ஒழிப்புத் துறையின் வழி காட்டுதலின்படி பொன்ன மராவதி தாலுகா அலுவ லகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் விஏஓ அப்பாதுரை சிவக்குமா ரிடம் ரசாயனம் தடவிய  50,000 ரூபாய் நோட்டு களை பெற்றார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி இமயவரம்பன், ஆய்வாளர் ஜவகர் தலை மையிலான லஞ்ச ஒழிப்புத்  துறையினர் விஏஓ அப்பாத்துரையை கைது செய்தனர்.

சிபிஎம் சிறப்பு பேரவை

நாகப்பட்டினம், ஜுலை 24 - மத்திய மற்றும் மாநி லக் குழு முடிவுகளை விளக்கி சிபிஎம் நாகை மாவட்டக் குழு சார்பில்  சிறப்பு பேரவை நாகப் பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது.  இதில் மாநில செயற் குழு உறுப்பினர் பி. செல்வசிங், மத்திய மற்றும் மாநிலக் குழு  முடிவுகளை விளக்கி  கூறினார். மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பி னரும் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகைமாலி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செய லாளர்கள், இடைக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

நாளை விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 24 - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.7.2024 (வெள்ளிக்கிழமை) அன்று  காலை 10.30 மணியள வில் மாவட்ட ஆட்சிய ரகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு  அலுவலர்கள், விவசா யம் சம்பந்தப்பட்ட கோரிக் கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.  எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொ டர்புடைய கோரிக்கை களை தெரிவித்து பயன் பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

குடியிருக்க இடம் கேட்டு ஏகோஜி மகாராஜபுரத்தில் 19 ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 24 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிரா மத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் 19  ஆவது நாளான புதனன்றும் போராட்டம் நடைபெற்றது.  கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத் தினர், குடியிருக்க இடம் கேட்டு போராடும் மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

போலி பட்டாவை ரத்து செய்து பாதையை மீட்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - போலி பட்டாவை ரத்து செய்து, பாதையை மீட்க கோரி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் பிலோமி னாள்புரம் 2 ஆவது வீதி சர்வே எண்.319/16 நடைபாதையை  319/16 பி ஆக தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்து,  பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்ட வருவாய் துறை, பத்திரப்பதிவுத்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பட்டாவை ரத்து செய்து பாதையை மீட்டு, தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் கிளைகள் சார்பில் புதனன்று பாப்பாகுறிச்சி, காட்டூர் விஏஓ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கமலா நேரு நகர் கிளைச் செயலா ளர் மரியசெல்வம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, காட்டூர்  பகுதி செயலாளர் மணிமாறன், பகுதி குழு உறுப்பினர் நல்லையா, செந்தில்குமார், குமார், கிளைச் செயலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் பேசினர்.  இதில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் தங்கதுரை, மரியராஜ், கண்ணன், செல்வராஜ் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

இணையவழியில் வர்த்தகம் தலைமையாசிரியையிடம் ரூ.13.71 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சாவூரில் பள்ளித் தலைமையாசிரியையிடம் இணைய வழியில் வர்த்தகம் எனக் கூறி ரூ.13.71 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி  வருகின்றனர். தஞ்சாவூரிலுள்ள தனியார் பள்ளித் தலைமையாசி ரியையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஏப்ரல் மாதம் வந்த  தகவலில் இணைய வழியில் பங்குச்சந்தை வர்த்தகம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்றும், அதற்கான  இணைப்பு முகவரியும் இருந்தன. இதை நம்பிய அவர் இணைப்பு முகவரிக்கு சென்ற போது அவரது எண் வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப் பட்டது. அதிலிருந்த நபர்கள் தங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக குறிப்பிடப் பட்டிருந்ததை தலைமை யாசிரியை நம்பினார். இதையடுத்து, இணைப்பில் இருந்த  செயலி வழியாக பல்வேறு தவணைகளில் ரூ.13.71 லட்சம்  முதலீடு செய்தார். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. இது மட்டுமின்றி, எதிர்முனையில் இருந்தவர்களைத் தொடர்பு  கொண்டபோது, அவர்கள் அழைப்பை எடுக்க மறுத்து விட்டனர்.  இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தலைமை யாசிரியை தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார்  செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சாலையில் ஓடும் கழிவு நீர்:  தஞ்சையில் மறியல் போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சாவூரில் சாலையில் கழிவு நீர் ஓடுவதைக் தடுக்க  நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மாமன்ற உறுப்பி னர் தலைமையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள மாரிக்குளம் சுடு காட்டில் கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. இதில் மின்  தடை அல்லது இயந்திர கோளாறு ஏற்படும்போது கழிவு நீர் வழிந்து விளார் சாலை, முனியாண்டவர் காலனி சந்திப்பு பகுதியில் சாலையைக் கடந்து எதிரே உள்ள வாரி யில் திறந்த வெளியில் செல்வது வழக்கம். இதனால், சுகா தார சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அப்பகுதி மக்கள்  ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ஒரு மாதமாக இப்பிரச்னை இருப்பதாகவும், இதற்கு மாநகராட்சி நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி அப்பகுதி  மாமன்ற உறுப்பினர் வெ.கண்ணுக்கினியாள் (அமமுக) தலைமையில் பொதுமக்கள் சாந்தபிள்ளை கேட் - மேரீஸ்  கார்னர் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, சாலை யில் கழிவு நீர் வழிந்து ஓடுவதைத் தடுக்கும் பணியில் மாநக ராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.