மன்னார்குடி, ஜூன் 10-
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் ஜூன் 9 தேதியிட்ட உத்தர வில், கூத்தாநல்லூர் நக ராட்சி ஆணையர் மீது கடு மையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நிர்வாக காரணங்களுக்காக வும் பொது நலன் கருதியும் அவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னதாக ஜூன் 8 அன்று கூத்தாநல்லூர் நகரத்தைச் சார்ந்த விஜய ராகவன் (35) என்ற வாலிபர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்று ஊழியர்களால் காப்பாற்றப் பட்டார்.
வாலிபர் விஜயராக வனை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, விஜய ராகவன் ஒரு தனியார் வங்கி யில் ரூ.35 லட்சம் கடன் வாங்கி ஜேசிபி பொக்லைன் இயந்திரம் வாங்கி கூத்தா நல்லூர் நகரத்திலும் சுற்றுப்புற கிராமங்களிலும் பிழைப்பு நடத்தி வந்துள் ளார்.
மேலும், நகராட்சி தூய்மைப் பணிகள் தூர்வா ரும் பணிகள் குறிப்பிட்ட வேலை ஆணைகளின் மூல மும் செய்து வந்தார். இந்த வகையில், ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் வாடகை நிலுவை யாக நகராட்சி நிர்வாகத்திட மிருந்து வர வேண்டி இருந்தது.
இதுகுறித்து பலமுறை ஆணையர் குமரி மன்னனி டம் கேட்டும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் அந்தத் தொகை கிடைக்கும் என்று கூறியதாக தெரிவித் தார்.
இதுகுறித்து நகராட்சி மண்டல நிர்வாக ஆணைய ரகத்திற்கு புகார் மனு அனுப் பியுள்ளார். நிர்வாக ஆணை யர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் அளிக்குமாறு அறி வுறுத்தி உள்ளார்.
ஆனால், விஜயராகவன் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய் தார். முறைமன்ற நடுவம் விசாரணையில், கடந்த மே 23 அன்று நகராட்சி நிர்வா கத்திற்கும் அரசிற்கும் அவப் பெயர் ஏற்படுத்தும் வகை யில் நடந்து கொண்ட ஆணை யர் மீது ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும் எனவும் தாமத காலத்திற் கான வட்டியை ஆணையர் குமரி மன்னனிடம் இருந்து வசூல் செய்து மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த பின்னணியில், நக ராட்சி ஆணையர் குமரி மன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண் டும் என கருதப்படுகிறது. ந.நி.