திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவ.24 முதல் டிச.4 வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.