districts

img

புத்தக நன்கொடை வழங்கும் விழா

தஞ்சாவூர், ஏப்.13-  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும், கல்வியியல் துறை யும் இணைந்து உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை  முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.இராமச் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மையர், துறை  தலைவர்கள், பேராசிரியர்கள், கூட்டுப் பணியாளர்கள் மற்றும்  மாணவர்கள் கலந்து கொண்டனர்.  நூல் வாசிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பல்வேறு துறை  சார்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் புத்தகங்களை நன்கொ டைகளாக வழங்கினர். புத்தகம் நன்கொடை வழங்கும் நிகழ்வா னது வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்.24 வரை தொடர்ந்து  நடைபெறும். நன்கொடையாகப் பெறப்படும் புத்தகங்களை  அரசுப் பள்ளி நூலகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வும், புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ளவும்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது.