தஞ்சாவூர், டிச.30- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு துறை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பட்டுக்கோட்டையின் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் மூன்று தளங்களில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதில் 1, 2, இணை சார் பதிவு அலுவலகம், மாவட்ட பதிவாளர் தணிக்கை அலுவலகம், மாவட்ட பதிவாளர் நிர்வாக அலுவலகம் உள்ளன. ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த். மாவட்ட பதிவாளர் அருள்ஜோதி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில், இணை சார் பதிவாளர்கள் நல்லமுத்து, சந்திர சேகரன், சுசீலா, இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நகர வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் இம்மானுவேல் ராஜ், பத்திர எழுத்தாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.