districts

img

கோபாலப்பட்டினத்தில் ரத்த தான முகாம்

அறந்தாங்கி, செப்.24 - புதுக்கோட்டை மாவட் டம் கோபாலப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து 3-வது மாபெரும் ரத்த தானம் முகாமை கோபாலப்பட்டினத்தில் நடத்தின. மாவட்டச் செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உறுப் பினர்கள், பொதுமக்கள், ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக் கும் மேற்பட்டோர் 31 யூனிட் ரத்தத்தை தானமாக அளித் தனர். இவை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. ரத்தம் வழங்கிய அனைவருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன்  சான்றிதழ் வழங்கினார்.