districts

img

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

புதுக்கோட்டை, ஜன.29 - தமிழ்நாடு ஆளுநர் புதுக் கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசலுக்கு வருவதைக் கண்டித்து  கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தலைமையில் சிபிஎம்,  சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சியினர் திங்கள் கிழமை புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு பொதுவானவராகவும், பொறுப்பானவராகவும் இருக்க வேண்டியது ஆளுநர் பதவி.  இந்தப் பதவியைக் கொச்சைப் படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் பிரதிநிதி யைப் போலவும், ஆர்எஸ்எஸ் கருத்துகளைப் பிரச்சாரம் செய்ப வராகவும் தொடர்ந்து செயல்பட்டு  வருகிறார். சுற்றுப் பயணம் என்ற பெயரில் தான் செல்லும் இடங்க ளில் எல்லாம் விஷமப் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் இயல்பாக நடந்து வருகிறது. அதனொரு பகுதி யாக புதுக்கோட்டை மாவட்டம்  சித்தன்னவாசலுக்கு திங்கள் கிழமை அவர் வருகை தருவதாக இருந்தது.  புதுக்கோட்டைக்கு அவர் வருகை தருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. திருச்சியிலிருந்து காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில், அன்னவாசல் பிரிவு ரோட்டில் கட்டியாவயல் என்னும் இடத்தில்  நடைபெற்ற போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு  ஆகியோர் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராய ணன், எஸ்.ஜனார்த்தனன், வி.தொ.ச  மாவட்டச் செயலாளர் டி.சலோமி,  மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.சுசிலா, சிபிஐ சார்பில் வி. சிங்கமுத்து, க.சுந்தர்ராஜன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.  போலீசாரின் தடுப்புகளையும் மீறி இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதில் 14 பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் கைது  செய்தனர்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ பேட்டி

போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய எம். சின்னதுரை எம்எல்ஏ., “தமிழ்நாடு  ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டு  மக்களையும், தமிழ் மொழியை யும், தமிழர்களின் பண்பாட்டை யும், கலாச்சாரத்தையும் கொச் சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.  மேலும், தமிழ்நாட்டில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்தை மதிக்காமலும், சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் கோப்புகள் மற்றும் மசோதாக் களுக்கு கையெழுத்துப் போடாம லும் அரசமைப்பு சட்டத்தின் மாண்புகளையும் மரபுகளையும் மீறிச் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ற பொறுப்பான பத விக்கு களங்கம் விளைவிக்கும்  வகையில் ஆர்எஸ்எஸ், பாஜக வின் ஊதுகுழலாகச் செயல்படும் ஆளுநரை ஒட்டுமொத்தத் தமிழ் நாடும் வெறுக்கிறது. அத னொரு பகுதியாகத்தான் புதுக் கோட்டையிலும் இத்தகைய போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார். ஆளுநரின் வருகை ரத்து இந்நிலையில், நேரமின்மை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருவது ரத்து செய்யப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.