திருச்சிராப்பள்ளி, ஜன.29- திருச்சி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, பஞ்சப்பூர் ஏரி, திருவெறும்பூர் கிளியூர், கூத்தைப்பார், துறையூர் நீர் நிலைகள் என 15 இடங்க ளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் அறி வுறுத்தலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் வனத்துறையினருடன் சேர்ந்து 100 பேர் 4 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விபரங்களும், அரிய வகை பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை கண்டறிந்து பாதுகாக்க முடியும்.