districts

img

பூம்புகார் - சங்க காலத்தின் ஓர் எழில்மிகு துறைமுகம்!

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் சுற்று லாத் துறை சார்பில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலை மையில் நடைபெற்றது. பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்,  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். பாரம்பரிய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி களுடன் விழா நடைபெற்றது.  சுற்றுலாத் துறையை மேம்படுத்து வதற்கு தமிழக அரசு சீரிய முயற்சிகளை  எடுத்து வருகிறது. பூம்புகாரில், ரூ.23.6  கோடி மதிப்பில் வளாகம் புதுப்பிக்கப் பட்டு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பல பணிகள் நடைபெற்று வரு கின்றன. முதற்கட்ட பணிகள் 85 சத வீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணி கள் பிப்ரவரியில் முடிவடைய உள்ளது.  சங்க காலத்தில் பூம்புகார் ஓர் எழில் மிகு துறைமுகமாக இருந்த இடம். பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆன ஒரு  இடம். வளம் கொழித்த இடம். சிலப்பதி காரத்தில் இதன் சிறப்புகள் நிறைய உள்ளன. முன்னாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞர், இந்த நகரை மேம்படுத் துவதற்கு பல்வேறு பணிகளை 1975-இல்  தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சி யாக இப்போதும் இந்த பணிகள் இன்னும் சிறப்பாக நடந்து வருகிறது. கொடியம்பாளையம், தேரழுந்தூர் போன்ற இடங்களிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவை யான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறோம். ரூ.10 கோடி மதிப்பில் தரங்கம் பாடியில் டேனிஷ் கோட்டை, மாளிகையை  புதுப்பிக்கும் பணிகள் நடந்து வரு கின்றன. இந்த பணிகள் முடிவடைந்து, மயி லாடுதுறை மாவட்டம் ஒரு சிறப்புமிக்க சுற்றுலா தலமாக உயரும். மக்களின் கோரிக் கைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டப் பணிகள்  நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சி யர் தனது பொங்கல் விழா உரையில் தெரி வித்தார்.