districts

img

சிபிஎம் ஆலந்தூர் ஒன்றியச் செயலாளராக பாஸ்கரன் தேர்வு

பெரம்பலூர், அக்.20- சிபிஎம் ஆலத்தூர் ஒன்றிய இரண்டாவது மாநாடு ஞாயிற் றுக்கிழமை பாடலூரில் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பாஸ்கரன் தலை மையில், ஒன்றிய கமிட்டி உறுப்பினர் பெரியசாமி வர வேற்புரையாற்றினார். மாவட் டக் குழு உறுப்பினர் மகேஸ் வரி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கலியபெருமாள் அஞ்சலி தீர்மானம் வாசித் தார்.  மாநில குழு உறுப்பினரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளருமான சாமி.நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் செல்லத்துரை வேலை அறிக்கை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகஸ்டியன் மற்றும் ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார்கள்.  மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து மாவட்டச் செயலாளர் பெ. ரமேஷ் நிறைவு உரையாற்றினார். ஆலத்தூர் கிளைச் செயலாளர் தேவராஜ் இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  ஆலத்தூர் ஒன்றியத்தில் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டும், 100 நாட்கள் வேலை மற்றும் சட்டக் கூலி முழுமையாக வழங்கிட வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மளிகை பொருட்களும் ரேஷன் கடையில் குறைந்த விலை யில் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய ஒன்றியக் குழு செயலாளர் எஸ். பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டார்.