districts

img

பாரதியார் பிறந்த நாள் கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, டிச.9 - டிச.11 மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில், கலந்துரையாடல் -  கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் பங்கேற்று, சமூகத்தில் கல்வி யின் அவசியத்தையும், பெண் கல்வி குறித்தும் சிறப்புரையாற்றினார். பின்னர், ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க புத்தகங்களை வழங்கினார். இதில் சமூக செயற்பாட்டாளர் டி.வி.காரல்  மார்க்ஸ், வழக்குரைஞர் ஐ.வி.என்.இன்குலாப்  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.