districts

img

திருச்செந்தூரில் பாரதி புத்தகாலய புத்தகக் கண்காட்சி துவக்கம்

தூத்துக்குடி,செப்.20- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.  தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், பள்ளி மாணவர்கள், இளை ஞர்களுக்கு பொது அறிவையும், வாசிப்பு பழக்கத்தை உண்டாகும் வகையில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியை திருச் செந்தூர் வருவாய் கோட் டாட்சியர் குருச்சந்திரன் தொடங்கி வைத்து புத்த கங்களை ார்வையிட்டார்.   தாசில்தார் வாமனன், தனி தாசில்தார் பாலச்சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜி, சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்துக்குமார், கணேசன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.