districts

img

பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையாருக்கு மாவட்ட நிர்வாகம் சிலை அமைக்க வேண்டும் தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 20 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 14-வது மாநாடு திருத்துறைப்பூண்டியில் தோழர் ஆர்.தாமோதரன் நினைவரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.   வலங்கை ராஜமா ணிக்கம் குழுவினரின் சிலம் பாட்டம், ஆப்பரக்குடி மேள  தாளத்தோடு காலை 9 மணிக்கு காமராஜர் சிலை யிலிருந்து துவங்கிய பேரணி, அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்துவிட்டு தொ டர்ந்து மாநாட்டு அரங்கை  வந்தடைந்தது. சு.தியாகரா ஜன், சி.செல்லதுரை, கதாக.அரசு.தாயுமாமானவன் தலைமைக் குழுவாக இருந்து வழிநடத்தினர். வரவேற்பு குழுத் தலை வர் கு.வேதரத்தினம் வரவேற் புரையாற்றினார். செயலாளர்  ஆதவன் தீட்சண்யா மாநாட்டை துவக்கி வைத்துப்  பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் கே.தமிழ்மணி ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப்  பேசினர். மாநில துணைத் தலைவர் கவிஞர்.ஏகாதசி நிறைவுரையாற்றினார்.  மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகம் சிலை அமைக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைய ரங்கம் அமைக்க வேண்டும்.  மக்கள் ஊழியர் பி.சீனிவாச ராவ் நினைவு நூலகம் அமைத்துத் தர வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.  கலை நிகழ்ச்சி களோடு மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவும், 17 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக மு.சௌந்தர ராஜன், செயலாளராக ஜி. வெங்கடேசன், பொருளா ளராக எம்.செல்வராஜ், துணைத் தலைவர்களாக சு. அம்பிகாபதி, சி.செல்லத்துரை, துணைச் செயலாளர்களாக டி.வி.புரட்சிதாசன், கே. பிச்சைக்கண்ணு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.