புதுக்கோட்டை, டிச.29 - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராமப்பகுதியி லிருந்து முத்துக்காடு செல்லும் சாலை யின் வடபுறமாக மகாவீரர் சமண சிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்க ழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு படிக்கும் மாண வர்கள் ச.மாரியம்மாள், சா.ரெங்க ராஜ், இரா.பிரியங்கா, ச.லோகேஸ்வ ரன் ஆகியோர் கண்டுபிடித்தனர். இந்நி லையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணி கண்டன் தலைமையில் உறுப்பினர்கள் பேராசிரியர் கருப்பையா, கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ, ராஜாங்கம், இளங்கோ ஆகியோர் தொடராய்வு மேற்கொண்ட போது கழுமரம், சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கம் ஆகி யவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறு வனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறிய தாவது: பாரதிதாசன் பல்கலைக்கழக மாண வர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் சமண மதத்தின் 24 ஆவது தீர்த்தங்கர ரான வர்த்தமானர் எனும் மகாவீரர் திரு மேனி என்பதை உறுதி செய்தோம். இச்சிற்பம் 89 சென்டிமீட்டர் உயரமும், 54 சென்டிமீட்டர் அகலத்துடனும் காணப் படுகிறது. மேலும் இச்சிற்பம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு 100 மீட்டர் தொலைவில் நாட்டார் வழிபாட்டு காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. அதன் எதிர்புறத்தில் சுமார் 150 ஆண்டு களுக்கு முற்பட்ட கல்லாலான 170 சென்டிமீட்டர் உயரமுடைய கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. அதனரு கிலேயே பாண்டியர் கலைப்பாணியி லான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவர் சிற்பம் (உடைந்த நிலையில்) முழுதும் சிதைந்த நந்தி, பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர், வீரபத்திரர் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழு கன்னி யர் சிற்பத்தொகுதி, கற்கோவிலின் சிதல மடைந்த அடிமானமும் காணப்படுகிறது.
மகாவீரர் சிற்பம்
இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன், சிதைந்த சுருள் முடி தலை யுடனும், மூடிய கண்கள், தெளிவற்ற மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள் , விரிந்த மார்புடன் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது . தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த் தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளைய மும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், பின்புலத்தில் முக்கு டைக்கு மேலாக குங்கிலிய மரமும் அதில் தொங்கும் குஞ்சமும் கட்டப்பட் டுள்ளது. சிற்பத்தின் பக்கவாட்டில் இயக்கி சித்தாக்கியாவும், இயக்கன் மாதங்கனும் உடலில் ஆபரணங்களுட னும் தலையில் கிரீடத்துடனும் , ஒரு கையில் சாமரத்தை தோளில் சாய்த்தவா றும், மற்றொரு கையை இடுப்பில் வைத்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளது.
கழுமரம்
இறையூரில் வழிபாட்டிலுள்ள கழு மரம் சமீப காலத்தையதாகும்.மேலும் மரம் மற்றும் இரும்பாலான கழுமரம் அழிந்த பிறகு அதே போன்று கல்லில் செய்து வழிபடுவதாக புரிந்துகொள்ள முடிகிறது. இம்மரத்தில் காத்தவராயன் அருளாடுபவர், இதில் ஏறி நின்று அருள் வாக்கு கூறுவதாக மக்கள் கூறுகின்ற னர்.
இந்த பண்பாட்டு வழக்கம் தென் மாவட்டங்களில் இன்றளவும் நடை முறையில் உள்ளது. திருட்டு உள்ளிட்ட சமூகக் குற்றங்களை செய்வோரையும், எதிர் நாட்டவரையும் கழுவேற்றி தண்டனை வழங்கப்பட்டது குறித்தும், செவி வழி செய்திகளும் சில நாட்டார் பாடல்களின் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது.
ஆவுடையார் கோவிலிலுள்ள பிற்கால ஓவியம் , கழுகுமலைக் கோயில் சுவ ரோவியங்கள், மதுரை மீனாட்சியம் மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட் டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களி லும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை. இந்நி லையில் சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவ கோவிலும் அருகருகே அமைந்துள்ளதால் சம ணர்களை கழுவேற்றிய இடமாக இறை யூர் இருந்ததா என்பது குறித்து தொடர் ஆய்வுகளுக்கு இந்த புதிய சான்றுகள் வழிவகை செய்கிறது என்றார்.
ஆய்வுப்பணியின் போது பாரதி தாசன் பல்கலைக்கழக மாணவர்கள் பி. அனுபாரதி க.கனிமொழி , என் .ஸ்ரீதர், உள்ளூர் பொதுமக்கள் பூசாரி ரெங்க ராசு, இறையூர் ரெங்கராசு, முருகன், முருகையா உள்ளிட்ட பொதுமக்கள் உட னிருந்தனர்.