புதுக்கோட்டை, ஜூலை 26 -
டெல்டா விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளை புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் விவசாயி களுக்கும் அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி, கந்தர்வகோட்டை ஆகிய தாலு காக்களில் 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு, காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய் பாச னப் பகுதிக்குள் வருகிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண் ணீரை வழங்காததால் டெல்டா மாவட்டங்க ளில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடி கள் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்த கைய பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள காவிரி பாசனப்பகுதி விவ சாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, டெல்டா விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அரசு அறிவிக்கும் சலுகை கள், மானியங்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, அத்தகைய சலுகைகளை புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசன விவசாயிகளுக்கும் அறிவிக்க வலியுறுத்தி கறம்பக்குடியை அடுத்த ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முகமதுகனி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட துணைச் செய லாளர் த.அன்பழகன் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொரு ளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர் பேசினர்.