புதுக்கோட்டை, ஜூன் 14-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்த வர்களிடம் கூடுதலாக ரூ.50 ஆயிரம் கேட்டு நிர்பந்தித்ததால் புதுக்கோட்டையில் பய னாளிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒன்றிய, மாநில அரசு களின் பங்களிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வரு கிறது.
அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயும் பெறப்பட்டு அதில் பலருக்கு வீடு களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதில் சிலர் குடியேறவும் செய்து விட்டனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு கட்டு மானப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டி கூடுதலாக ரூ.50 ஆயிரம் முதல் இரண்டு லட்சத்து 13 ஆயிரம் வரை பயனாளி களிடம் பங்களிப்புத் தொகை வசூல் செய்ய வேண்டும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை போஸ் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் சார்பில் 560 வீடுகள் கட்டப் பட்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் தலா ஒரு லட்ச ரூபாய் கட்டணமாக பணம் பெற்றுக் கொண்டு வீடுகள் வழங்கப்பட்டன.
தற்போது இந்த வீடுகளில் பயனாளிகள் குடியேறி வரும் சூழலில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அரசாணை யை சுட்டிக்காட்டி ஒவ்வொரு பயனாளிகளி டமும் தலா ரூ.50 ஆயிரம் கூடுதல் கட்டண மாக கட்டச் சொல்லி அறிவுறுத்தி உள்ள னர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயனாளி கள் புதனன்று அங்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அப்போது ஒலிபெருக்கியில் பேசிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ஷகிலா, சம்பந்தப் பட்ட குடியிருப்பில் கூடுதல் வசதிகளுடன் வீடுகள் தரமாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை உயர் வால் தமிழ்நாடு அரசு இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதனால் தான் ஐம்பதாயிரம் ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்த வலியுறுத்துவ தாகவும் தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பயனாளிகள் அதிகாரிகளோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனார். இத னால், அங்கிருந்து ஷகிலா உள்ளிட்ட அதி காரிகள் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, போஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்றுள்ள பயனாளிகள் பிருந்தாவனம் அருகே புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய அர சாணையை ரத்து செய்துவிட்டு பழைய அர சாணைப்படி பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாயை நிர்ண யிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வரும் திங்கட்கிழமை அன்று சமாதானக் கூட்டம் நடத்தி இப்பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என்று தெரி வித்ததை தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு அவர்கள் களைந்து சென்றனர்.
சிபிஎம் கண்டனம்
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறுகையில், ‘‘வாழ வழியில்லாமல், வாடகைகூட கொடுக்க முடியாதவர்கள்தான் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே, செலுத்திய ஒரு லட்ச ரூபாயக்கு இன்னமும் வட்டிகட்ட முடியாமல் பலர் திண்டாடி வரு கின்றனர். எவ்வளவு சிரமப்பட்டாலும் தங்க ளுக்கு என்று ஒரு வீடு கிடைத்துள்ளதே என்ற நிம்மதியில்தான் அந்த சிரமத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை மேலும் தாக்குகின்ற வகையில் ரூ.50 ஆயிரம் கூடு தலாக கட்டச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை கூடுதலாகிவிட்டது என்றால் அந்தத் தொகையை அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக எளிய மக்கள் மீது சுமை யை ஏற்றுவது ஏற்புடையது அல்ல. எனவே, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து கூடுதல் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.