districts

காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

கரூர், மே 17-

    கரூர் மாவட்டம் தாந்தோணிமலையில் மீன் வியாபாரி  மீது தாக்குதல் நடத்திய வேடசந்தூர் காவல்துறையினர் நட வடிக்கை எடுக்காததால் மனமுடைந்த 56 வயது பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்து சம்பவஇடத்திற்குச் சென்ற காவல்துறை யினர், வருவாய்த்துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்புப்  படையினர் மற்றும் உறவினர்கள்  முட்டை வியாபாரி செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்கும்படி சமாதானப்படுத்தினர்.  வியாபாரியை கைது செய்த பிறகு  தான் கீழே இறங்குவேன் என அவர் இறங்க மறுத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அவரை கீழே ஏற  இறங்கி வருமாறு தொடரந்து வலியுறுத்தினர்.

   அதன்  பேரில் அவர் கீழே இறங்கினார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. விசாரணையில் அவர், கரூர் பகுதியைச் சேர்ந்த முட்டை வியாபாரி செல்வி என்பதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வியாபாரத்திற்காக திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் சென்றபோது மீன் வியாபாரி ஒருவர் தன்னை தாக்கி யதாகவும் வேடசந்தூர் காவல்துறையில் புகார் அளித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.