தஞ்சாவூர், மே 22-
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஊரணிபுரத்தில் வி.ஆர்.இ திருமண மஹாலில் கோவி.ராதிகா தலைமையில் நடை பெற்றது.
கே.சிவகுமார் வரவேற் றார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் கஸ்தூரி, மாவட் டத் துணைத் தலைவர் ஏ. மேனகா, மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.சந்திர பிர காஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சி ராணி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
நிர்வாகிகள் தேர்வு
இதில் 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. ஒன்றியத் தலைவ ராக கே.சிவக்குமார், செய லாளராக கோவி.ராதிகா, பொருளாளராக ஏ.தில்லை நாயகி, துணைத் தலைவர் களாக எஸ்.தனசேகரன், ஆர்.சுதா, துணைச் செய லாளர்களாக சற்குணம், முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வளர்ச்சி நிதி
இந்தக் கூட்டத்தில் மாநில சங்க வளர்ச்சி நிதி யாக மாநில பொதுச் செயலா ளர் பி.ஜான்சி ராணியிடம், மதுக்கூர் ஒன்றியச் செய லாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், ஒன்றியப் பொருளாளர் புஷ்பலதா ஆகியோர் ரூ.15, 000, திருவோணம் ஒன்றியத் தின் சார்பில் ரூ.3,500, கும்ப கோணம் ஒன்றியம் சார்பில் ரூ.5,000 ஒரத்தநாடு ஒன்றி யம் சார்பில் ரூ.3,800 வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.
தீர்மானம்
தகுதியான மாற்றுத்திற னாளிகளுக்கு வங்கிகளில் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில், ஊனம் சதவீதம் நிபந்தனைகள் விதிக்காமல், வேலை ஒதுக்கீடு செய்து, முழுமை யான கூலி வழங்க வேண் டும். ஜூலை மாதத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தில்லி நாடாளுமன்றம் முன்பு நடைபெறும் போராட் டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.