பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி, ஊராட்சி மன்ற தலைவர் ராமாயிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.