districts

img

போக்குவரத்துக்கு லாயக்கற்ற தேவனாஞ்சேரி-கொத்தங்குடி சாலை வாழைக்கன்று நடும் போராட்டம்

கும்பகோணம், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவனாஞ் சேரி-கொத்தங்குடி சாலை திருப்புறம்பியம் வரை 4.5 கிலோ மீட்டர் செல்கிறது. இச்சாலை  கடந்த 2009-2010-இல் போடப்பட்டது. சுமார் 13  ஆண்டுகளை கடந்த இந்த சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்று உள்ளது. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம்,  வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை  மருத்துவமனை, நேரடி நெல் கொள்முதல் நிலையம், சேமிப்புக் கிடங்கு உள்ளிட்டவை உள்ளன.  இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம்  சார்பில் சாலை போடுவதற்காக கருங்கற்கள்  கொட்டப்பட்டன. ஆனால், திடீரென அச்சாலை கொட்டப்பட்ட கருங்கல் ஜல்லி கள் எடுத்துச் செல்லப்பட்டன.  இங்கு சாலை போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், சேத மடைந்த சாலையை சீர் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் ஐயப்பன் தலைமையில், சாலை யில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடை பெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய  தலைவர் நாகமுத்து, மாவட்டக் குழு உறுப்பி னர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர் கணே சன், விடுதலை சிறுத்தை கட்சி விவசாய அணி மாநில துணைச் செயலாளர் நாகப்பன்  மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பலர் வாழைக் கன்றை சாலையில் நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கும்ப கோணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி துணை  அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்,  சுவாமிமலை காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஜனவரி மாதத்திற்குள் சாலைகளை சீர்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.