புதுக்கோட்டை, ஜூலை 15 -
குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறார்களுக்கு மரபணு பரிசோதனை கோரிய சிபிசிஐடியின் மனு மீதான விசா ரணை ஜூலை 17 அன்றுக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பின் நீர்த்தேக்கத் தொட்டி யில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில், 21 பேரிடம் ஏற்கனவே மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மேலும் 4 சிறார்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் சார்பில் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனு மதி கோரப்பட்டிருந்தது. இவர்களில் 3 பேர் இறையூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வேங்கைவயலைச் சேர்ந்தவர்.
பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரு பவர்கள் சிறுவர்களாக இருப்பதால், பெற்றோர்களின் கருத்தை அறிய நீதிபதி எஸ்.ஜெயந்தி, அவர்களை கடந்த ஜூலை 12 அன்று நீதிமன்றத்துக்கு வரவழைத்திருந் தார். அப்போது, பள்ளி நேரம் என்பதால் அழைத்துவரவில்லை எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு சிறார்களுடன் நீதிமன்றம் வர அறிவுறுத்தப்பட்டது. இதன் படி, அவர்கள் தங்களது சிறார்களுடன் நீதி மன்றம் வந்தனர்.
வேங்கைவயல் சிறுவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மலர்மன்னன், இந்தப் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரி வித்தார். சிறார்களாக இருப்பதால், சிறார் நீதிக் குழுமத்தின் ஒருங்கிணைப்புடன் பரிசோ தனை நடத்தப்படலாம் என அரசு வழக்குரை ஞர் குமார் தெரிவித்தார். இதையடுத்து நீதி பதி எஸ்.ஜெயந்தி ஜூலை 17 ஆம் தேதிக்கு இந்த விசாரணையை ஒத்திவைத்தார்.