திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 -
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விதிக்க கூடாது. மருந்துவிலை நிர்ண யத்தில் ஒன்றிய அரசின் கொள்கையை மாற்ற வேண்டும். மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு துணை போகக் கூடாது. பொதுத்துறை மருந்து நிறு வனங்களை புனரமைத்து முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் இனியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் முரளி, மாநிலச் செயலாளர் செல்வராஜ், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.